அனுமதிப்பத்திரத்தை மீள உறுதிப்படுத்த நடவடிக்கை

துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரத்தை மீள உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை

by Staff Writer 03-07-2018 | 11:36 AM
Colombo (News 1st) துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரத்தை மீளவும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிற்கான அனுமதியை கொண்டிருப்பவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்து உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களுக்காக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளதுடன், அனுமதி பத்திரமின்றி பலர் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமாயின், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.