சிறிய தந்தையை கொலை செய்தவருக்கு மரணதண்டனை

திருகோணமலையில் சிறிய தந்தையை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

by Staff Writer 03-07-2018 | 5:53 PM
Colombo (News 1st)  திருகோணமலை - உப்புவௌி பகுதியில் தனது சிறிய தந்தையை கொலை செய்த குற்றவாளிக்கு இன்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளார். சந்தேகநபருக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி தாயின் இரண்டாவது கணவரை கொலை செய்ததாக குறித்த நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த நீதிபதி இளஞ்செழியன், குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக அறிவித்தார். இதற்கமைய, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.