சிறுத்தை கொலை: கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

சிறுத்தை கொலை: கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 03-07-2018 | 5:10 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் சிறுத்தை ஒன்றை சித்திரவதைக்குள்ளாக்கி கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் இன்று கிளிநொச்சி பதில் நீதவான் எம். கிரேஸியன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நீடிக்குமாறு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்திற்குள் கடந்த 21 ஆம் திகதி நுழைந்த சிறுத்தை தாக்கியதில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இதன் பின்னர், கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சிறுத்தை கொல்லப்பட்ட நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இதன்போது, கிராம மக்களால் சிறுத்தை சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட காணொளிகளும் நிழற்படங்களும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.