நகைக் கடை கொள்ளையர்களின் கார் பொலிஸார் வசம்

மாத்தறையில் நகைக்கடை கொள்ளையர்களின் காரைக் கைப்பற்றிய பொலிஸார்

by Staff Writer 02-07-2018 | 3:50 PM
Colombo (News 1st) மாத்தறை நகரிலுள்ள நகைக்கடையொன்றை கொள்ளையிடச் சென்ற சந்தேகநபர்கள் பயணித்த கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கார் உரிமையாளரின் கணவரான கபில குமார எனும் நபருடன், குறித்த கார் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நகைக்கடையைக் கொள்ளையடிப்பதற்காக குறித்த கார், கொஸ்கொட டில்ஷான் எனும் நபரால் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த சந்தேநபர்கள் மூவரை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்வதற்கும் குறித்த கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.