குளியாப்பிட்டி வீடொன்றில் கைக்குண்டுத் தாக்குதல்

குளியாப்பிட்டியில் வீடொன்றில் கைக்குண்டுத் தாக்குதல்

by Staff Writer 02-07-2018 | 11:31 AM
Colombo (News 1st) குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் சிறுகாயங்களுக்குள்ளான நால்வரும் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடையாளந் தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.