ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை நானே இயக்குவேன்

ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை நானே இயக்குவேன் - ஜெயம் ரவி

by Chandrasekaram Chandravadani 02-07-2018 | 12:40 PM
இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற அடையாளத்துடன், ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்வுடன் இணைந்து நடித்த 'டிக் டிக் டிக்' கடந்த வாரம் வெளியானது. படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஜெயம் ரவி,
எனது மகன் ஆரவ்வுக்கு பல திறமைகள் இருக்கு. அவனை வேற லெவலுக்குக் கொண்டுபோகணும். அவன் ஹீரோவா அறிமுகமாகும் முதல் படத்தை நான் தான் இயக்குவேன். என் முதல் படத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்தீங்களோ அதேயளவுக்கு என் மகனுக்கும் வரவேற்பைக் கொடுத்துருக்கீங்க. அவன் ஒரு இடத்துல உட்கார்ற ஆள் கிடையாது. படப்பிடிப்பின்போது ஒரே இடத்துல இருந்து எல்லாரோட நடிப்பையும் அவதானித்து நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டான். அதேநேரம், இந்தப் படத்திலிருந்த பல தவறுகளை சுட்டிக்காட்டியிருந்த போதிலும், தமிழில் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் என விமர்சனத்தில் குறிப்பிட்டீர்கள். ஆகவே, மீடியா நண்பர்களுக்கு நன்றி என்றார்.
ஆரவ், "என் முதல் படத்துக்கு சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் நன்றி. நான் என்ன பேசணும்னுகூட யோசிக்கலை. என் அப்பா எனக்கு நிறைய கத்துக்கொடுத்துருக்கார். நன்றி" என இறுதியில் பேசிய ஆரவ் தனது மழலை மொழியில் கூறி முடித்தார்.