வயிற்றில் கொக்கெய்ன் - பிரேஸில் பிரஜை கைது !

வயிற்றில் கொக்கெய்ன் - பிரேஸில் பிரஜை கைது !

by Staff Writer 01-07-2018 | 5:15 PM

Colombo (News 1st) கொக்கெய்ன் போதை வில்லைகளை விழுங்கி இலங்கைக்கு வந்த மற்றுமொரு பிரேஸில் பிரஜையும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்தாரிலிருந்து இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பிரேஸில் பிரஜை ஒருவர் கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துவந்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விழுங்கியிருந்த 5 போதைப்பொருள் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கொக்கெய்ன் போதைவில்லைகளை விழுங்கி நாட்டிற்கு வந்தபோது நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 7 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.