மட்டக்களப்பு - ஊறணி விபத்தில் மூவர் காயம்

மட்டக்களப்பு - ஊறணி விபத்தில் ஒரே குடும்பத்தவர்கள் மூவர் காயம்

by Staff Writer 01-07-2018 | 11:54 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு ஊறணிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே காயமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியுள்ளதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.