கொழும்பில் ''SPB-யின் Golden Night'' இசை நிகழ்ச்சி

நாளை கொழும்பில் ''SPB-யின் Golden Night'' இசை நிகழ்ச்சி

by Staff Writer 30-06-2018 | 4:41 PM
Colombo (News 1st) கொழும்பில் நாளை (01) ''SPB-யின் Golden Night'' இசை நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தார். SPB-யின் Golden Night இசை நிகழ்ச்சி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எம்.மோகன் ராஜின் அப்சராஸ் இசைக்குழுவுடன், பத்மபூஷன் டொக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் தென்னிந்திய இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். ''SPB-யின் Golden Night'' இசை நிகழ்ச்சிக்கு சக்தி TV மற்றும் சக்தி FM ஊடக அனுசரணை வழங்குகின்றது.