உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஊழல்

நாட்டின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் மோசடி ஒட்டிக்கொண்டுள்ளது: ஹர்ஷ டி சில்வா

by Bella Dalima 30-06-2018 | 8:07 PM
Colombo (News 1st)  கலாநிதி சமன் கலேகமவின் நினைவு தின இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று கொழும்பில் இடம்பெற்றன. உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு நிபுணர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதன்போது அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். முதலீட்டாளர்கள் வருகை தருகின்றபோது சிலர் இலஞ்சம் கோருவதாகவும், அரசியல்வாதிகள் சிலர் கோரும் தொகை முதலீட்டினை விட அதிகம் எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறினார். இதன் காரணமாகவே முதலீட்டாளர்கள் வேறு நாடுகளை நோக்கிச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் மோசடி ஒட்டிக்கொண்டிருப்பதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.