14ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து இருவர் பலி

தெஹிவளை தொடர்மாடிக் கட்டட நிர்மாணத்தின்போது 14ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து இருவர் பலி

by Staff Writer 30-06-2018 | 9:19 AM
Colombo (News 1st) தெஹிவளை - அஜித் குணதிலக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தொடர்மாடிக்குடியிருப்பின் 14ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர். நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, இவர்களிருவரும் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பதுளை, பிபிலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 39 மற்றும் 45 வயதான இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.