சுழிபுரம் ரெஜினா கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

சுழிபுரம் ரெஜினா கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

by Staff Writer 30-06-2018 | 9:37 AM
Colombo (News 1st) யாழ். சுழிபுரம் பகுதியில் ரெஜினா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதான 2 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை இன்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ். சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் சிவனேஸ்வரன் ரெஜினா கடந்த 25ஆம் திகதி கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சிவகுமார் சதீஸ்குமார் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.