SAITM:சேர் ஜோன்கொத்தலாவலயில் இணைக்கும் சட்டம் அமல்

SAITM மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்ளும் சட்டம் அமலுக்கு வந்தது

by Bella Dalima 28-06-2018 | 3:42 PM
SAITM மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார். சபாநாயகர் அலுவலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. அதற்கமைய, இந்த சட்டம் இன்று முதல் அமலாகின்றது. SAITM எனப்படும் தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அடங்கிய சட்டமூலம் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.