ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

by Staff Writer 28-06-2018 | 12:22 PM
Colombo (News 1st) ஹெரோய்ன் உள்ளிட்ட சில போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இவரது பயணப் பையிலிருந்து 320 கிராம் ஹெரோயின், 52 கிராம் அயிஸ் போதைப்பொருள் மற்றும் 230 கிராம் ஹசீஸ் என்பன மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 70 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மேற்கொண்டு வருகின்றது.