வைத்தியர் எனக்கூறி மோசடி செய்தவர் கைது

வைத்திய அதிகாரி எனக்கூறி பல இலட்சம் மோசடி செய்தவர் கைது

by Staff Writer 28-06-2018 | 1:14 PM
Colombo (News 1st) வைத்திய அதிகாரி என தம்மை அடையளப்படுத்தி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஒருவர் புறக்கோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பமுனுகம, கந்தானை, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் சுமார் 50 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார். வைத்தியராகப் பணியாற்றுவதாகக் கூறி பெண்களை ஏமாற்றி இவர் திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பமுனுகம பகுதியைச் சேர்ந்த 31 வயதான குறித்த சந்தேகநபர், இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.