Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மானிப்பாயில் கழுத்து வெட்டப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பாடசாலை ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இன்று காலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
69 வயதான பெண்னொருவரே கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் வீட்டில் இருந்த போது இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்குள் புகுந்த ஆண் ஒருவர் குறித்த பெண்ணை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
எனினும், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.