by Staff Writer 27-06-2018 | 7:35 AM
Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3,111 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மோட்டார்வாகன போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.டீ. தனஞ்சய, சுகாதார கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வருடத்தில், வாகன விபத்துக்களில் 24,680 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் விபத்துக்களினால், நாளொன்றில் 23 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் அல்லாத பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.