வீடுகள் அமைக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம்

வடக்கு, கிழக்கில் வீடுகள் அமைக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி

by Staff Writer 27-06-2018 | 7:06 PM
Colombo (News 1st)  வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைப்பதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்க அமைச்சரவையின் முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து China Railway Beijing Company வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். இரண்டு வருடங்களில் இந்த வீடுகளை அமைக்க சீன நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. 1,60,000-ற்கும் மேற்பட்ட வீடுகள் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையாக இருப்பதாகவும், அதனை விரைவில் அமைத்துக் கொடுப்பதற்கே சீன நிறுவனத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.