சென்னையில் 3 இலங்கையர்களின் சடலங்கள் மீட்பு

சென்னையில் மூன்று இலங்கையர்களின் சடலங்கள் மீட்பு

by Bella Dalima 27-06-2018 | 7:22 PM
Colombo (News 1st)  தமிழகத்தின் சென்னை - மதுரவாயல் பகுதியில் மூன்று இலங்கையர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 38 வயதான ஆண் ஒருவரதும் அவரின் 6 மற்றும் 4 வயதான இரண்டு மகன்களினதும் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஹபீப் ரஹ்மான் என்ற 38 வயதான குறித்த நபர் தனது மகன்களுக்கு கட்டாயப்படுத்தி விசம் அருந்தக் கொடுத்திருக்கக்கூடும் என சென்னை பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். எனினும், தற்கொலை செய்துகொண்டமைக்கான எவ்வித சான்றுகளும் ஹபீப் ரஹ்மான் தங்கியிருந்த அறையிலிருந்து கிடைக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஹபீப் ரஹ்மானின் மனைவி குடும்பத்திலிருந்து பிரிந்து இலங்கையில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.