இராமேஸ்வரத்தில் தலைமன்னாரை சேர்ந்தவர் கைது

இராமேஸ்வரத்தில் தலைமன்னாரை சேர்ந்தவர் கைது

by Staff Writer 27-06-2018 | 3:39 PM
Colombo (News 1st)  தமிழகத்தின் இராமேஸ்வரம் - லங்காபுரி பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமன்னாரை சேர்ந்த 34 வயதான காண்டீபன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பயணித்த படகு கரையோர காவற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். ஆட்கடத்தல் அல்லது தங்கம் கடத்தலில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.