ஏறாவூர் வாகன விபத்தில் இருவர் பலி

ஏறாவூர் வாகன விபத்தில் இருவர் பலி

by Staff Writer 26-06-2018 | 10:29 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை கிரான் பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனைக்கு பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் எதிர்த்திசையில் பயணித்த வேனொன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை கைது செய்வது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.