யாழ். சுழிபுரம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

யாழ். சுழிபுரம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

by Staff Writer 26-06-2018 | 1:50 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் சுழிபுரம் - காட்டுப்புலம் கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் 6 வயது சிறுமியொருவர் நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். சுழிபுரம் - காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி, அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பாடசாலையிலிருந்து சுழிபுரம் சந்தி வரை மக்கள் பேரணியாக சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறுகின்றன. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்