தபால் தொழிற்சங்க நடவடிக்கை முடிவு

தபால் தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர தீர்மானம்

by Staff Writer 26-06-2018 | 7:07 PM
Colombo (News 1st)  தொழிற்சங்க நடவடிக்கையை இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சில திருப்திகரமான தீர்வுகள் கிடைத்ததால், இந்த முடிவை எடுத்ததாக தபால் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ஷிந்தக பண்டார தெரிவித்தார். ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பின் 16 ஆவது நாள் இன்றென்பது குறிப்பிடத்தக்கது.