சுழிபுரம் சிறுமி கழுத்து நெரித்துக் கொலை

சுழிபுரம் சிறுமி கழுத்து நெரித்துக் கொலை: பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது

by Bella Dalima 26-06-2018 | 4:28 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சுழிபுரம் காட்டுப் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து 6 வயது சிறுமியொருவர் நேற்று (25) சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், சிறுமியின் சடலம் மீதான பிரேதப்பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி, அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.