களத்தடுப்பின்போது குசல் ஜனித் உபாதைக்கு உள்ளானார்

களத்தடுப்பின்போது குசல் ஜனித் உபாதைக்கு உள்ளானார்

by Staff Writer 26-06-2018 | 7:04 AM
(Just In) மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா உபாதைக்கு உள்ளாகினார். இதனையடுத்து, அவர் உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டியொன்றின் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ​இன்று ஆரம்பமாகிய மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 144 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த இலக்கை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 2 விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்களை பெற்றிருந்தது. பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களை பெற்றது.