by Staff Writer 25-06-2018 | 9:36 PM
யாழ் சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் 6 வயது சிறுமியொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.