சரணவை கைது செய்ய ஆணை!

சரண குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யுமாறு பிடியாணை!

by Staff Writer 25-06-2018 | 6:37 PM

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான சரண குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யுமாறு கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இன்று வழக்கொன்றில் ஆஜராக தவறியதை தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்த காலத்தில் 8 மில்லியன் ரூபா பெறுமதியுடைய வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சரண குணவர்தனவுக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.