பொடி போலுக்கு  மரணதண்டனை!

உதய குமார எனப்படும் பொடி போல் என்பவருக்கு தென் மாகாண மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை!

by Staff Writer 25-06-2018 | 5:57 PM

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளங் காணப்பட்ட உதய குமார எனப்படும் பொடி போல் எனும் பிரதிவாதிக்கு தென் மாகாண மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரட்ணவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதி, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் உறுப்பினர் என்பதுடன், அவருக்கு எதிராக கொலை முயற்சியில் ஈடுபட்டமை, துப்பாக்கி வைத்திருத்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் காலி மற்றும் பலபிட்டிய நீதிமன்றங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ரத்கம, பல்லியப்பிட்டிய பகுதியில் 2001 ஒக்டோபர் 13 ஆம் திகதி கொடவத்த லியனகே லலித் பிரசன்ன மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை தொடர்பில் பிரதிவாதி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக போதிய சாட்சி இல்லாமையினால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்