by Staff Writer 24-06-2018 | 7:32 PM
வாரியபொல மலகனே குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர்.
இன்று காலை தாமரை இலைகளை பறிப்பதற்காக 5 பேருடன் படகில் பயணித்த நிலையில்,விபத்து சம்பவித்துள்ளது.
நீரில் மூழ்கிய ஐவரில் மூவர் நீந்தி கரையை அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடற்படை மற்றும் பொலிஸ் உயிர் பாதுகாப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.