பகிடிவதையால் வவுனியா வளாகத்தில் வகுப்புத்தடை!

பகிடிவதை விவகாரத்தை தொடர்ந்து வவுனியா வளாகத்திற்கு வகுப்புத் தடை

by Staff Writer 24-06-2018 | 7:20 PM
பகிடிவதை விவகாரத்தை தொடர்ந்து வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம் இரண்டாம் வருட மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வகுப்புத்தடை விதிக்கப்பட்டதாக வளாக முதல்வர் டாக்டர்.மங்களேஸ்வரன் தெரிவித்தார். மேலும் இந்த விடயம் தொடர்பிலான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.