துப்பாக்கிக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தத்தீர்மானம்

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதை இடைநிறுத்தத் தீர்மானம்

by Staff Writer 24-06-2018 | 10:19 AM
Colombo (News 1st) துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை இடை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதாளக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. துப்பாக்கிற்கான அனுமதியைப் பெற்றிருப்பவர்களுக்கு, துப்பாக்கி அத்தியசியமானதா என்ற கோணத்தில் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, கடந்த 5 மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக வைத்திருந்த 350 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.