கைகொடுத்தவரை கைவிடேன் - சி.வி

கைகொடுத்தவரை கைவிடேன்-''நீதியரசர் பேசுகிறார்" வௌியீட்டு நிகழ்வில் சி.வி

by Staff Writer 24-06-2018 | 10:17 PM

வடக்கு மாகாண முதலமைச்சரின் உரைகளின் தொகுப்பான ''நீதியரசகர் பேசுகிறார்'' நூல் வௌியீட்டு விழா இன்று நடைபெற்றது.

வட மாகாண முதலமைச்சரின் உரைகள் தொகுக்கப்பட்ட ''நீதியரசர் பேசுகிறார்'' நூல் வௌியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மாணவரும் சட்டத்தரணியுமான ஆர்.டி.இரட்ணசிங்கம் இந்த நூலை தொகுத்துள்ளார். நூல் வௌியீட்டு விழாவின் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.