தங்க பிஸ்கட்களுடன் அதிகாரி கைது

மூன்று கோடியே 60 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது

by Staff Writer 23-06-2018 | 8:50 AM
Colombo (News 1st) மூன்று கோடியே 60 இலட்சம் பெறுதியான 60 தங்க பிஸ்கட்களுடன் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 6 கிலோகிராம் நிறையுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.30 அளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.