கடற்கரையோர போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

வௌ்ளவத்தை முதல் கொள்ளுப்பிட்டி வரையான கடற்கரையோர வீதிப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

by Bella Dalima 23-06-2018 | 5:18 PM
Colombo (News 1st)  2018 ஆம் ஆண்டிற்கான சைக்கிளோட்டப் போட்டி காரணமாக வௌ்ளவத்தை முதல் கொள்ளுப்பிட்டி வரையிலான கடற்கரையோர வீதிப்போக்குவரத்து நாளை (24) மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காலப்பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.