சீதுவ - கட்டுநாயக்க ரயில் சேவை இடைநிறுத்தம்

சீதுவ - கட்டுநாயக்க ரயில் சேவை இடைநிறுத்தம்

by Staff Writer 23-06-2018 | 10:20 AM
Colombo (News 1st) சீதுவ மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இன்று காலை 8 மணிமுதல் நாளை மாலை 4 மணிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள பாலமொன்றின் புணரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சிலாப மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து, கொழும்பிலிருந்து சீதுவ வரையிலும் நீர்கொழும்பிலிருந்து சிலாபம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.