இறக்குமதியாகும் உளுந்தின் வரி அதிகரிக்கப்படவுள்ளது

இறக்குமதியாகும் உளுந்தின் வரியை அதிகரிக்க தீர்மானம்

by Staff Writer 23-06-2018 | 4:12 PM
Colombo (News 1st)  இறக்குமதி செய்யப்படும் உளுந்திற்கான வரியை 50 ரூபாவால் அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் உளுந்திற்கான வரி 150 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்தது. உள்ளூர் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை மற்றும் உணவு, விவசாய, வர்த்தகப் பிரிவின் தலைவர் துமிந்த பிரியதர்ஷன குறிப்பிட்டார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உளுந்திற்கு அதிக விலையை பெற்றுக்கொடுப்பதும் எதிர்வரும் போகத்தில் உளுந்து செய்கையை ஊக்குவிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்தது.