ஹிக்கடுவயில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

ஹிக்கடுவயில் துப்பாக்கிச்சூடு: பாதாளக்குழுவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

by Bella Dalima 22-06-2018 | 3:23 PM
Colombo (News 1st)  ஹிக்கடுவ - வேவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால், சைக்கிளில் பயணித்த நபர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 29 வயதான 'இதாசி சமிந்த' என அழைக்கப்படும் பாதாளக்குழுவைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், 5 கொலைச்சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.