மட்டு வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மட்டு வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 22-06-2018 | 3:37 PM
Colombo (News 1st)  மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள மட்டு வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும், குறித்த நபர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். சடலத்தில் எவ்வித காயங்களும் இல்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.