14 பேருக்கு நாட்டிற்குள் பிரவேசிக்க தடை

புலம்பெயர் தமிழர்கள் 14 பேருக்கு நாட்டிற்குள் பிரவேசிக்க தடை: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

by Staff Writer 22-06-2018 | 3:15 PM
Colombo (News 1st)  LTTE அமைப்புடன் இணைந்து செயற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் 14 பேருக்கு நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி சேகரித்தமை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்த 14 பேர் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47 ஆம் பிரிவின் கீழ் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் 01. நடராஜா சத்தியசீலன் அல்லது சீல் மாரன் 02. கமலசிங்கம் அருணகுலசிங்கம் அல்லது கமல் 03. அன்ரனி ராசா அன்ரனி கெலிஸ்டார் அல்லது பரதன் 04. சிவசுப்ரமணியம் ஜெயகணேஷ் அல்லது கணேஷ் அல்லது சாம்ராஜ் 05. பொன்னுசாமி பாஸ்கரன் அல்லது ஜெயகரன் 06. வேலாயுதன் பிரதீப்குமார் அல்லது கலீபன் 07. சிவராசா சுரேந்திரன் அல்லது வதன் 08. சிவகுருநாதன் முருகதாஸ் அல்லது கதிரவன் 09. திருநீலகண்டன் நகுலேஸ்வரன் அல்லது புஷ்பநாதன் 10. மகேஷ்வரன் ரவிச்சந்திரன் அல்லது மென்டிஸ் அல்லது திருக்குமரன் 11. சுரேஷ் குமார் பிரதீபன் 12. கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி 13. ஜீவரத்னம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவ் மாஸ்டர் 14. டோனி ஜியான் முருகேசுபிள்ளை