தவறை ஒப்புக்கொண்ட தினேஷ் சந்திமால்

தவறை ஒப்புக்கொண்ட தினேஷ் சந்திமால், சந்திக்க ஹத்துருசிங்க, அசங்க குருசிங்க

by Bella Dalima 22-06-2018 | 6:25 PM
Colombo (News 1st) மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை தாமதிக்கச் செய்தமை தவறு என்பதை இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், தலைமை பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க, அசங்க குருசிங்க ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று நடத்திய விசாரணையின் போது அவர்கள் தங்களின் தவறை ஏற்றுக்கொண்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்ட விதிகள் பிரகாரம், 3 ஆம் பிரிவில் போட்டியை தாமதிக்க செய்வது குற்றமாகும். அந்த வகையில், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், தலைமை பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க, அசங்க குருசிங்க ஆகியோர் காரணமாக இருந்துள்ளனர். இந்தக் குற்றத்திற்கு தினேஷ் சந்திமால், சந்திக்க ஹத்துருசிங்க, அசங்க குருசிங்க ஆகியோருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.