ஞானசார தேரர் பிணையில் விடுவிப்பு

ஞானசார தேரர் பிணையில் விடுவிப்பு

by Bella Dalima 22-06-2018 | 7:06 PM
Colombo (News 1st)  ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ஞானசார தேரரை விடுவிக்குமாறு ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். வௌிநாட்டிற்கு பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் குடிவரவு, குடியகல்வு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேரரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியார் சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.