சுதாகரனுக்காக கையெழுத்து சேகரிப்பு:ஆவணம் கையளிப்பு

ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்து ஆவணம் இந்திய துணைத்தூதுவரிடம் கையளிப்பு

by Bella Dalima 22-06-2018 | 3:59 PM
Colombo (News 1st)  அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணத்தின் பிரதி இன்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனினால் இன்று பிற்பகல் குறித்த ஆவணத்தின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அண்மையில், வட மாகாணம் முழுவதும் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சுமார் மூன்று இலட்சம் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டன. கையெழுத்துகள் அடங்கிய ஆவணம் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவணத்தின் பிரதி இன்று வட மாகாண கல்வி அமைச்சரினால் இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்