பணிக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம்

பணிக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம் - தபால்மா அதிபர்

by Chandrasekaram Chandravadani 21-06-2018 | 4:56 PM
Colombo (News 1st) பணிக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு மட்டுமே ஜுன் மாத சம்பளம் வழங்கப்படும் என தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன வலியுறுத்தியுள்ளார். பணிக்கு திரும்பாது தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஜுன் முதலாம் திகதியிலிருந்து 11 ஆம் திகதி வரையான நாட்களுக்குரிய சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என தபால்மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர் பணிப்பகிஷ்கரிப்பை உடனடியாக நிறுத்தி பணிக்குத் திரும்புமாறு தபால்மா அதிபர், தபால் திணைக்கள ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினருக்கும் தபால்மா அதிபருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காதமையால், தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்