அர்ஜூனின் தந்தையை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

அர்ஜூன் அலோசியஸின் தந்தைக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

by Staff Writer 21-06-2018 | 6:47 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று முற்பகல் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ​ பேர்ப்பச்சுவல் வர்த்தகக் குழுமத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸை எதிர்வரும் 05 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெஃப்ரி அலோசியஸ் , அர்ஜூன் அலோசியஸின் தந்தையென்பது குறிப்பிடத்தக்கது.