by Bella Dalima 20-06-2018 | 7:52 PM
Colombo (News 1st) கொட்டாஞ்சேனை - புது செட்டித்தெருவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு புது செட்டித்தெருவில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (19) இரவு பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியைச் சேர்ந்த குணரட்னம் விஜிதா என்ற 35 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.