தெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டவர்கள் பலி

தெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் பலி

by Staff Writer 20-06-2018 | 9:20 AM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ - ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் மீது வேன் மோதி இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் 34 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய சிறுமியொருவருமே உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் எல்பிட்டிய மற்றும் களுத்துறை நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.