சைட்டம் மாணவர்கள் குறித்து பாராளுமன்றில் விவாதம்

சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பல்கலையில் இணைப்பது குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது

by Staff Writer 20-06-2018 | 9:02 AM
Colombo (News 1st) சைட்டம் (SAITM) மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நேற்று கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, இது தொடர்பில் இன்றைய நாள் முழுவதும் விவாதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.