ஹங்வெல்லயில் தாய், மகளின் சடலங்கள் மீட்பு

ஹங்வெல்லயில் வீடொன்றிலிருந்து காயங்களுடன் தாய், மகளின் சடலங்கள் மீட்பு

by Bella Dalima 19-06-2018 | 7:07 PM
Colombo (News 1st)  ஹங்வெல்ல பகுதியில் வீடொன்றிலிருந்து காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று மாலை குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த வீட்டில் இருந்த 4 மாத குழந்தை உயிருடன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த பெண்ணின் கணவரால் இவர்கள் இருவரும் நேற்றிரவு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.