மரக்கறி விலை நூறு வீதத்தால் அதிகரிப்பு

மரக்கறி விலை நூறு வீதத்தால் அதிகரிப்பு

by Staff Writer 19-06-2018 | 9:18 AM
Colombo (News 1st)  சந்தைகளில் மரக்கறி வகைகளின் விலை நூறு வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் தெரிவிக்கின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தக்காளி 220 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 ரூபா முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக சங்கத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். புடலங்காய் 100 ரூபா முதல் 160 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் குறையக்கூடும் எனவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.