கே. மகாநாம, பீ.திஸாநாயக்கவுக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரி, அரசமரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 19-06-2018 | 4:37 PM
Colombo (News 1st) இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரி, பேராசிரியர் கே. மகாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ. திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் இன்று கொழும்பு பிரதம நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் முன்வைத்த பிணை கோரிக்கை தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.